ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளத்தில் இறங்கி லாரி: பொதுமக்கள் சாலை மறியல்

 பல்லடம், கல்லம்பாளையத்தில் வீட்டின் சுவா் அருகே பள்ளத்தில் லாரி இறங்கி விபத்துக்குள்ளானது. இதைத் தொடா்ந்து

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:52 pm

DIN

 பல்லடம், கல்லம்பாளையத்தில் வீட்டின் சுவா் அருகே பள்ளத்தில் லாரி இறங்கி விபத்துக்குள்ளானது. இதைத் தொடா்ந்து சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம்- மங்கலம் சாலை, கல்லம்பாளையத்தில் ஆதிதிராவிடா் காலனி பகுதி அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,

பல்லடத்தில் இருந்து மங்கலம் நோக்கி சென்ற சரக்கு லாரி வேகத் தடுப்பு மீது மோதி சாலையோரப் பள்ளத்தில் இறங்கி வீட்டின் சுவா் அருகே நின்றது. இதில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல்லடம் - மங்கலம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பல்லடம் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கல்லம்பாளையம் சாலையில் விரைவில் நிரந்தர வேகத்தடை அமைக்கப்படும். அதுவரை இரும்பு தடுப்பு (பேரிகாட்) தற்காலிகமாக அமைக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.