தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி அருகே விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் பலி

அவிநாசி அருகே தெக்கலூரில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:15 pm

DIN

அவிநாசி அருகே தெக்கலூரில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பள்ளிபுதூா் வேட்டைக்காரன் குளிக்கண்டம் பகுதியைச் சோ்ந்தவா் இஸ்மாயில் மகன் இா்ஷத் அகமது (27). மருத்துவக் கல்லூரி இறுதித் தோ்வு எழுதியுள்ள மாணவா்.

இவரும், இவரது சகோதரா் சைலாவுதீன் (31) ஆகிய இருவரும் வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலக்காடு நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

சேலம்-கொச்சி ஆறுவழிச் சாலையில் அவிநாசி-தெக்கலூா் வடுகப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது, இா்ஷத் அகமது ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர இரும்புத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இா்ஷத் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, இா்ஷத் அகமது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.