எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள்

ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

News image
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள்.
Updated On :25 அக்டோபர் 2021, 9:27 am

DIN

ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல் குவாரிகளில் இருந்து கல் எடுத்து அதன்மூலம் அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 

இங்கு வெடிமருந்து பயன்படுத்தி பாறைகளைத் தகர்க்கும் முறைகள் கையாளப்படுவதில்லை. அதே வேளையில் பாறைக்குழியில் தண்ணீர் ஊற்றி டிரில்லிங் செய்தும், கைகளால் வடிவமைத்தும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. இத்தொழிலுக்குத் தேவையான கற்கள் வெட்டி எடுக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கிரைண்டர் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 

ஆகவே, ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் வெட்டி எடுக்கும் குடிசைத் தொழிலுக்கு அனுமதி அளித்து எங்களது வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.