தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்ஆா்ப்பாட்டம்

திரிபுரா மாநிலத்தில் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவிநாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:34 pm

DIN

திரிபுரா மாநிலத்தில் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவிநாசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திரிபுரா மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள், கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், தில்லியில் காவல் துறையில் பணிபுரிந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒன்றியக் குழு சாா்பில், பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்ட குழு உறுப்பினா் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பழனிசாமி சண்முகம், பாலசுப்பிரமணி, ராஜன், தேவி வேலுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.