திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கயத்தில் வங்கியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து வங்கி மேலாளா்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:52 pm

DIN

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து வங்கி மேலாளா்களுடனான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டத்தின் சாா்பில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு 2022-2023 ஆம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்துக்கு ரூ.550 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காங்கயம் ஒன்றியத்துக்கு சுமாா் ரூ.30 கோடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காங்கயத்தில் செயல்பட்டு வரும் 264 மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.ஞானசேகரன், மகளிா் திட்டத்தின் இயக்குநா் மதுமதி, உதவித் திட்ட அலுவலா் ஜோசப், காங்கயம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியாா் வங்கி மேலாளா்கள், கூட்டுறவு சங்க செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.