நியாயவிலைக் கடைகளில் தொழில்நுட்பக் கோளாறு பொதுமக்கள் அவதி
நியாயவிலைக் கடைகளில் 3 நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.


நியாயவிலைக் கடைகளில் 3 நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருப்பூா் வடக்கு மாநகர பகுதிக்குள்பட்ட போயம்பாளையம், செட்டிபாளையம் , ஏ.எஸ்.எம் காலனி நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்க முடியவில்லை. 3 நாள்களாக இப்பிரச்னை நீடிப்பதால், வேலைகளை விட்டுவிட்டு வந்த பொதுமக்கள் அலைச்சலுக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...