நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

அவிநாசி அருகே கோயில் திருவிழாவுக்கு தடை: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோயில் திருவிழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :26 ஜூலை 2022, 2:50 pm IST

அவிநாசி: அவிநாசி அருகே போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோயில் திருவிழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

Story image

இது குறித்து அவிநாசி அருகே ராயர்பாளையம், சுள்ளிப்பாளையம், வடுகபாளையம் ஆகிய பகுதி மக்கள் திரண்டு வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில்  அளித்த மனுவில் கூறிருப்பதாவது:

எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் திருப்பூர், ஈரோடு, கோவை என பல்வேறு பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் வழிபட்டு வரும் போத்தம்பாளையம் பெரிய கருப்பராயன் கோயிலுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் நேர்த்திக் கடனாக செலுத்த வேண்டி உள்ளது. 

இந்நிலையில் இக்கோயில் செவ்வாய்க்கிழமை சாட்டப்பட்டு ஆடி மாதம் 25 ஆம் தேதி திருவிழா நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருவிழா நடத்த வட்டாட்சியர் தடை விதித்து உள்ளதாக கூறி பூசாரிகள் இன்று கோயிலுக்கு வர மறுத்து விட்டார்கள். இதனால் நாங்கள் மன வேதனையுடன் உள்ளோம். திருவிழா நடத்துவதற்கு 5 குடும்பத்தினர்  மட்டுமே ஒத்துழைக்காமல் உள்ளனர். 

மீதமுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திருவிழா நடத்த மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம். மேலும் நேர்த்திக் கடனுக்காக 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆடுகளை வளர்த்து வருகிறோம். இனிமேலும் அதை வளர்க்க எங்களால் இயலாது. 

திருவிழா நடத்தாமல் விட்டாலும் சாமி குற்றம் ஆகிவிடும். ஆகவே திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் ராஜேஷ், திருவிழா நடத்த ஒத்துழைக்காத குடும்பத்தினர் உள்பட இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.