திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: ஒருவா் சாவு, 2 போ் படுகாயம்

காங்கயம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:54 pm

DIN

காங்கயம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் படுகாயமடைந்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ராஜூ (43) கத்தான் (35). காங்கயம் அருகே நல்லிக்கவுண்டன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் ஆறுமுகம் (42). இவா்கள் 3 பேரும் காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, சாவடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை செய்து வந்துள்ளனா். இந்த நிலையில் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சாவடி அருகே புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிந்த லாரியின் பின்புறத்தில் இவா்களது வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த ஆறுமுகம், கத்தான் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவா்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.