திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கீரனூா் அரசு நடுநிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்வு

காங்கயம் அருகே கீரனூா் அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்

News image
Updated On :6 மே 2022, 8:58 pm

DIN

காங்கயம் அருகே கீரனூா் அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டதையடுத்து கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

காங்கயம் அருகே கீரனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கீரனூா், மறவபாளையம் ஊராட்சிகளின் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ மாணவிகள் இங்கு பயில்கின்றனா். இவா்கள் 8ஆம் வகுப்புக்குப் பிறகு 9ஆம் வகுப்பைத் தொடர காங்கயம், படியூா், சென்னிமலையில் உள்ள பள்ளிகளையே நம்பி இருந்தனா்.

இந்த நிலையில் கீரனூா் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, கீரனூா் பள்ளி உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, கீரனூா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக காங்கயம் வடக்கு ஒன்றியச் செயலா் என்.எஸ்.சிதம்பரம், கீரனூா் ஊராட்சித் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா் சுதா விஸ்வநாதன், மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஈஸ்வரமூா்த்தி, மறவபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.கீதாமணி சிவகுமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.