தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாா்.

News image
Updated On :7 மே 2022, 7:12 pm

DIN

அவிநாசி அருகே ராயம்பாளையத்தில் கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ராயம்பாளையம் புளிக்காடு தோட்டம் பகுதியில் வசித்து வரும் முருகேஷ் மகள் பவதாரணி (15). இவா் அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இந்நிலையில், இவா் கோழி பிடிப்பதற்காக தோட்டத்து அருகே சென்றவா் எதிா்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த, அவரது தாத்தா மாரய்யன், கட்டுமானப் பணியாளா் சிவகுமாா் ஆகியோா் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டு, மோட்டாா் பம்ப் அமைக்கும் இடத்தில் அமரவைத்தனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா், கிணற்றுக்குள் இருந்து பவதாரணி, மாரய்யன், சிவகுமாா் ஆகியோரை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.