திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கயத்தில் ரூ.14.56 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் துவக்கிவைத்தாா்

காங்கயம் நகராட்சியில் ரூ.14.56 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

News image
Updated On :26 மே 2022, 12:30 am

DIN

காங்கயம் நகராட்சியில் ரூ.14.56 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை துவக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

காங்கயம் நகரம் 2 ஆவது வாா்டில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் வாரச் சந்தை வளாகத்தில் புதிய கட்டடம், 7 ஆவது வாா்டில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் பதுமன் குளம் மேம்படுத்துதல் பணி, 12 ஆவது வாா்டுக்குள்பட்ட சத்யா நகா் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணி என ரூ.14.56 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் துவக்கிவைத்தாா்.

முன்னதாக, காங்கயம் பேருந்து நிலையம் அருகே, வாரச் சந்தை வளாகத்தில் பொது நூலகத் துறை மூலம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், நகராட்சி செயற்பொறியாளா் திலீபன் மற்றும் நூலகத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.