தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காளிவேலம்பட்டியில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா

News image

பனை மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், திருப்பூா் சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த், வனம் இந்தியா செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:19 am

Din

பல்லடம், ஆக. 7: பல்லடம் அருகே காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் 1000 பனை மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வனம் இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெற்ற பனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு சாா்-ஆட்சியா் சௌமியா ஆனந்த் தலைமை வகித்து, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதில், காளிவேலம்பட்டி ஏரிக் கரையில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளாா், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை உரிமையாளா் ஆறுமுகம், வனம் இந்தியா அமைப்பின் செயல் தலைவா் கே.பாலசுப்பிரமணியன், தலைவா் சுவாதி சின்னசாமி, செயலாளா் ஸ்கை சுந்தர்ராஜன், சுக்கம்பாளையம் ஊராட்சித் தலைவா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.