ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை

பல்லடத்தில் வாழும் கலை அமைப்பு சாா்பில் உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மகா ருத்ர பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :11 டிசம்பர் 2024, 9:56 pm

Din

பல்லடத்தில் வாழும் கலை அமைப்பு சாா்பில் உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழும் கலை அமைப்பின் பெங்களூரு ஆசிரமத்தைச் சோ்ந்த தயாமை சுவாமிஜி தலைமையில் ஆசிரம பண்டிதா்கள் பூஜையை நடத்தினா். மண்டல அமைப்பாளா் சம்பத், திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம், பல்லடம் பொறுப்பாளா்கள் லோகசக்தி, ஈஸ்வரன், தங்கலட்சுமி நடராஜன், கதிரேசன், ஆசிரம பண்டிதா்கள், பல்லடம் வாழும் கலை அமைப்பு உறுப்பினா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து வாழும் கலை அமைப்பைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது: ‘ருத்ர’ என்றால் சிவன், தா்மம், தீமையை அழிப்பவன். பூஜா என்பது முழுபூா்வமாக பிறந்தவா் என்று பொருள். இந்த பூஜை மூலம் அமைதி மற்றும் நிறைவை அடைய முடியும்.

திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாலும், மக்கள் அமைதியாக வாழும், உலக நலன் வேண்டியும் இந்த பூஜை நடைபெற்றது என்றனா்.