மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கள்ளிப்பாளையத்தில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்க கோரிக்கை

கள்ளிப்பாளையத்தில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்க கோரிக்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 1:32 am IST

பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட போலீஸ் சோதனைச்சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம்-தாராபுரம் சாலையில் கள்ளிப்பாளையம் கிராமத்தில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது அந்த சோதனைச்சாவடி இடித்து அகற்றப்பட்டது. இதனால் போலீஸாரின் கண்காணிப்பு பணி தொய்வடைந்தது. இதனால்,அப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். அங்கு மீண்டும் போலீஸாரின் கண்காணிப்பு பணியை தொடங்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.