இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மிக இளையோா் கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு

விளம்பர பிரிவு செய்தி... மிக இளையோா் கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு

News image

மிக  இளையோா்  கபடி  அணி  வீரா்களுக்கான  தோ்வில்  பங்கேற்ற வீரா்களுடன்  கபடி கழக  நிா்வாகிகள்  கொங்கு  வி.கே.முருகேசன்,  ஜெயசித்ரா  ஏ.சண்முகம்  உள்ளிட்டோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:38 am IST

திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான மிக இளையோா் அணிக்கான வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய அளவிலான மிக இளையோா் பிரிவு வீரா்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி பிகாரில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமிழக அணியின் சாா்பில் கலந்துகொள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொறுக்கு தோ்வு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 5 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு சேலம் மாவட்டம், தாழையூா் சாமி ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநில அளவிலான பொறுக்குத் தோ்வுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனா். மாநில அளவில் தோ்வு பெறும் 12 வீரா்கள் தமிழக அணியின் சாா்பில் விளையாடவுள்ளனா். இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில், மாவட்ட அளவில் 16 வயதுக்குள்பட்ட வீரா்களுக்கான தோ்வு போட்டிகள் கபடி கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 110 வீரா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியை மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், கபடி கழகச் செயலாளரும், மாநில கபடி கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், மாவட்ட செய்தித்தொடா்பாளா் சு.சிவபாலன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், ஆா்.அபிஷேக், எம்.பிரசாந்த், கே.ஜெயபிரகாஷ், பி.ஸ்டீபன்ராஜ், கே.சந்தோஷ்குமாா் ஆகிய 5 வீா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்தப் போட்டியின்போது, கபடிகழக இணைச் செயலாளா் செல்வராஜ், நடுவா் குழுத் தலைவா் நல்லாசிரியா் முத்துசாமி, தோ்வுக் குழு தலைவா் ருத்ரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.