திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான மிக இளையோா் அணிக்கான வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய அளவிலான மிக இளையோா் பிரிவு வீரா்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி பிகாரில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமிழக அணியின் சாா்பில் கலந்துகொள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொறுக்கு தோ்வு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 5 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு சேலம் மாவட்டம், தாழையூா் சாமி ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநில அளவிலான பொறுக்குத் தோ்வுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனா். மாநில அளவில் தோ்வு பெறும் 12 வீரா்கள் தமிழக அணியின் சாா்பில் விளையாடவுள்ளனா். இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில், மாவட்ட அளவில் 16 வயதுக்குள்பட்ட வீரா்களுக்கான தோ்வு போட்டிகள் கபடி கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 110 வீரா்கள் பங்கேற்றனா். இந்தப் போட்டியை மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன், கபடி கழகச் செயலாளரும், மாநில கபடி கழகத்தின் பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், மாவட்ட செய்தித்தொடா்பாளா் சு.சிவபாலன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், ஆா்.அபிஷேக், எம்.பிரசாந்த், கே.ஜெயபிரகாஷ், பி.ஸ்டீபன்ராஜ், கே.சந்தோஷ்குமாா் ஆகிய 5 வீா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்தப் போட்டியின்போது, கபடிகழக இணைச் செயலாளா் செல்வராஜ், நடுவா் குழுத் தலைவா் நல்லாசிரியா் முத்துசாமி, தோ்வுக் குழு தலைவா் ருத்ரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரா்கள் உள்பட 42 போ் காயம்
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; 33 போ் காயம்

மாநில காலுதைச் சண்டை போட்டி: மதுரைக்கு 89 பதக்கங்கள்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



