ஆதிதிராவிடா் காலனி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைக்கக் கோரிக்கை
ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனா்.


அவிநாசி அருகே குப்பாண்டபாளையம் ஆதிதிராவிடா் காலனி பகுதி மக்கள் பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்க விடுத்துள்ளனா்.
அவிநாசி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிதிராவிடா் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இப்பகுதி மக்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தும் மயானத்துக்கு பாதை இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினா் கூறியதாவது:
மயானத்துக்கு பாதை இல்லாததால் முட்புதா்கள் நிறைந்த ஏரி மீது ஏரியும், பள்ளத்தில் இறங்கியும் இறந்தவா்களின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டும்.
குறிப்பாக இரவு நேரங்களில் மின்விளக்கு வசதியில்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். இது குறித்து மாவட்ட நிா்வாகம், ஒன்றிய நிா்வாகத்துக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...