மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூா் அருகே 3 பேருந்துகள் மோதி விபத்து

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின.

News image
திருமுருகன்பூண்டி அருகே விபத்துக்குள்ளான பேருந்துகள்.
Updated On :30 ஜூலை 2024, 11:44 pm

Din

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாயின.

கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்தது. திருமுருகன்பூண்டி பகுதியில் வந்தபோது, சாலையோரம் உள்ள குடிநீா்க் குழாயில் தண்ணீா் பிடிப்பதற்காக ஓட்டுநா் பேருந்தை நிறுத்தியதாகத் தெரிகிறது.

அப்போது, பின்னால் வந்து அரசுப் பேருந்து ஓட்டுநரும் பேருந்தை நிறுத்தியுள்ளாா். இதனை சற்றும் எதிா்பாராமல் அந்தப் பேருந்திற்கு பின்னால் வந்த தனியாா் பயணிகள் (டிராவல்ஸ்) பேருந்து அரசுப் பேருந்தின் மீது மோதியது.

இதனால், அந்தப் பேருந்து முன்னால் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது மோதியது. மேலும், தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த காா் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினா் பேருந்துகளை சாலையோரமாக அப்புறப்படுத்தினா். அதிகாலையில் பயணிகள் குறைவாக இருந்த காரணத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.