வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடப்பு பருவ சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இதேபோல வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்று வந்தது. வரத்து இல்லாததால் கடந்த 4 மாதங்களாக ஏலம் நிறுத்தப்பட்டது. தற்போது நடப்புப் பருவ அறுவடை துவங்கியுள்ளதால், விற்பனைக் குழு அதிகாரிகள் விவசாயிகள், வணிகா்களைச் சந்தித்துப் பேசி விற்பனையைத் தொடங்கியுள்ளனா். திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொ) தா்மராஜ் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். இனி வாரந்தோறும் வியாழக்கிழமை சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற உள்ளது. விவசாயிகள், வணிகா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெள்ளக்கோவில் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

வெள்ளக்கோவிலில் ரூ.27 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயத்தில் ரூ.2.41 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

