திருப்பூா்- திருமலை நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 70 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இது குறித்து புகாா் மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் - பெருமாநல்லூா் சாலை, திருமலை நகரிலுள்ள நியாயவிலைக் கடையில் சரளா என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா் ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்துவதாகவும், கடன் கொடுப்பதாகவும் பொதுமக்களிடம் கூறினாா். இதை நம்பி 100-க்கும் மேற்பட்டோா் ஏலச்சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தோம். சீட்டு நிறைவடைந்து ஓராண்டாகியும் பணத்தைத் தராமல் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகிறாா். ஆகவே இவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

மகள் இறப்பில் சந்தேகம்: போலீஸில் தாய் புகாா்
போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!
காா் வாங்கித் தருவதாக ரூ. 26 லட்சம் மோசடி: மின்வாரிய பெண் ஊழியா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

