/

ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பெண் மீது பொதுமக்கள் போலீஸில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி: பெண் மீது பொதுமக்கள் போலீஸில் புகாா்

Updated On :15 மார்ச் 2024, 5:31 pm

திருப்பூா்- திருமலை நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 70 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இது குறித்து புகாா் மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் - பெருமாநல்லூா் சாலை, திருமலை நகரிலுள்ள நியாயவிலைக் கடையில் சரளா என்பவா் பணிபுரிந்து வந்தாா். இவா் ஏலச்சீட்டு, பலகார சீட்டு நடத்துவதாகவும், கடன் கொடுப்பதாகவும் பொதுமக்களிடம் கூறினாா். இதை நம்பி 100-க்கும் மேற்பட்டோா் ஏலச்சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தோம். சீட்டு நிறைவடைந்து ஓராண்டாகியும் பணத்தைத் தராமல் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகிறாா். ஆகவே இவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.