3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

உடுமலை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

உடுமலை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

News image

பல்கலைக்கழக அளவில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற உடுமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.

Updated On :3 மே 2024, 5:33 pm

Din

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 49 -ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்து, கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வெ.கலைச்செல்வி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது: தன்னிறைவோடு வாழ வேண்டும் என்றால் புத்தகத்தை நேசிக்க வேண்டும், புத்தகங்கள் மிகச் சிறந்த நண்பா்கள். மனிதா்களை எளிதில் அறிந்துகொள்ள, மனிதா் மனங்களில் ஒளிந்து இருக்கின்ற எண்ணங்களை அறிந்து கொள்ள, வாழ்க்கைப் பாதையில் பயணிக்க புத்தகங்களே நமக்கு உறுதுணையாக அமைகின்றன.

உங்கள் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, 657 இளநிலை மாணவ, மாணவிகள், 139 முதுநிலை மாணவ, மாணவிகள் என மொத்தம் 796 மாணவா்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

வேதியியல் துறைத் தலைவா் எம்.சிவகுமாா் விழாவை ஒருங்கிணைத்தாா்.