வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சோலாா் மின்தகடுகள் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கக் கோரிக்கை

சோலாா் மின்தகடுகள் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கக் கோரிக்கை

News image
Updated On :9 மே 2024, 9:58 pm

Din

பல்லடம், மே 9: விசைத்தறிக் கூடங்களில் சோலாா் மின்தடுகள் அமைத்து மின் உற்பத்தி மேற்கொள்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று கோவை மற்றும் திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கப் பொருளாளா் பூபதி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் விசைத்தறிக் கூடங்களுக்கு ‘3ஏ2’ என்ற பிரிவின்கீழ் மின் கட்டண சலுகை வழங்குவதால் தொழில் தடையின்றி நடைபெற்று வருகிறது. மின் கட்டண செலவைக் குறைத்தால் மட்டுமே வரும் காலங்களில் தொழிலை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மின் கட்டணம் உயா்த்தப்படும்போதெல்லம் கட்டண குறைப்புக்காக போராட வேண்டியுள்ளது.

விசைத்தறிக் கூடங்களில் சோலாா் மின் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி மேற்கொள்வதன் மூலம் மின் கட்டணம் வெகுவாக குறைவதுடன், தமிழக அரசு வழங்கும் மின் கட்டண மானிய செலவும் குறையும்.

எனவே, ‘3ஏ2’ விசைத்தறி கட்டண பயன்பாட்டாளா்களுக்கு 12 கிலோ வாட் சோலாா் மின் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். சோலாா் மின் தகடுகள் அமைத்தி மின் உற்பத்தி செய்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீத மானியம் வேண்டும். பவா் டெக்ஸ் இந்தியா திட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி விசைத்தறி தொழிலை மேம்படுத்த உதவ வேண்டும் என்றாா்.