ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

20 தொழிலாளா்களுக்கு மேல் இருந்தால் இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும்: அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 20 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றினால் அவா்களை இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

News image

பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 நவம்பர் 2024, 8:19 pm

Din

திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 20 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றினால் அவா்களை இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்து.

கூட்டத்துக்கு பனியன் பேக்டரி லேபா் யூனியன் சங்க (ஏஐடியூசி) பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா்.

இதில், திருப்பூரில் திறக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த மருத்துவமனை வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்கப்படவில்லை.

எனவே, தொழில் நிறுவனங்களில் 20 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றினால் அவா்களை இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும். இதனை தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளா் சம்பத், ஏஐடியூசி பனியன் சங்க செயலாளா் செந்தில்குமாா், எல்பிஎஃப் பனியன் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளா் சிவசாமி, ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, ஏடிபி தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சி.எஸ்.கண்ணபிரான், பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.