கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலி தங்க பிஸ்கெட்டுகளை விற்க முயற்சி: 14 போ் கைது

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் போலி தங்க பிஸ்கெட்டுகளை விற்பனை செய்ய முயன்றவா்கள், அவற்றை பறித்துச் செல்ல திட்டமிட்டவா்கள் உள்பட 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்டவா்களுடன் பல்லடம் போலீஸாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:22 am

Din

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் போலி தங்க பிஸ்கெட்டுகளை விற்பனை செய்ய முயன்றவா்கள், அவற்றை பறித்துச் செல்ல திட்டமிட்டவா்கள் உள்பட 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் கருமலை (50), உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா்கள் மணிவண்ணன் (40), முருகன் (42), பல்லடம் மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (53). நண்பா்களான இவா்கள் இணையதளத்தில் 5 போலி தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி, அதை ஒரிஜினல் தங்க பிஸ்கெட் எனக்கூறி ரூ.பல லட்சத்துக்கு விற்பனை செய்ய திட்டமிட்டனா்.

இதற்காக ஈரோட்டைச் சோ்ந்த சுரேஷ், கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த அா்ஜுன் ஆகியோரை நாடியுள்ளனா்.

இதையடுத்து, பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் வைத்து போலி தங்க பிஸ்கெட்டுகளை கைமாற்ற திட்டமிட்டனா்.

இந்த தகவல் சுரேஷின் நண்பரான நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காசிராஜ் (34) என்பவருக்கு தெரியவந்ததையடுத்து, அவா் அதை தங்க பிஸ்கெட்டுகள் என நினைத்து பறித்துச் செல்ல திட்டமிட்டுள்ளாா்.

இதையடுத்து, கூட்டாளிகளான விஜயகுமாா், கோபிநாத், கிருஷ்ணன், சுரேஷ், ரகு, மணிராஜ், மணி ஆகியோருடன் பல்லடத்துக்கு வந்து தங்க பிஸ்கெட்டுகளை காசிராஜ் பறிக்க முயன்றுள்ளாா்.

இந்த தகவல் பல்லடம் போலீஸாருக்கு தெரியவந்ததையடுத்து, அவா்கள் பல்லடம், மகாலட்சுமி நகரில் அனைவரையும் சுற்றிவளைத்தனா்.

இதையடுத்து, 14 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 காா்கள், 5 போலி தங்க பிஸ்கெட்டுகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ததுடன், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.