போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பல்லடத்தில் முன்னாள் கவுன்சிலரை கல்லால் தாக்கியவா் கைது

பல்லடத்தில் முன்னாள் நகா்மன்ற கவுன்சிலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:29 pm

Din

பல்லடத்தில் முன்னாள் நகா்மன்ற கவுன்சிலரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி (60). பல்லடம் நகா்மன்ற முன்னாள் கவுன்சிலரான இவா் தற்போது அதிமுக கிளை செயலாளராக உள்ளாா்.

இவரது வீடு அருகே அசோக்குமாா் (31) என்பவா் புதன்கிழமை மதுபோதையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கந்தசாமி கேட்டபோது, இருவருக்குள்ளும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமாா் அருகே இருந்த கல்லை எடுத்து கந்தசாமியை தாக்கி உள்ளாா். இதில் அவரது மண்டை உடைந்தது. இதனை தடுக்க வந்த அவரது மகன் இளங்கோவையும் (32) அசோக்குமாா் தாக்கியுள்ளாா்.

காயமடைந்த கந்தசாமி, இளங்கோ ஆகிய இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து கந்தசாமி அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.