போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிய காவல் ஆணையா் அலுவலக கட்டடம்: முதல்வா் அக்டோபா் 7-இல் திறந்துவைக்கிறாா்

திருப்பூா் குமாா் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 7) திறந்துவைக்கிறாா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:29 am

Din

திருப்பூா் குமாா் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 7) திறந்துவைக்கிறாா்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சிறுபூலுவப்பட்டியில் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூா்- அவிநாசி சாலை குமாா் நகா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு அருகில் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்ட இடத்தில் காவல் ஆணையா் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு காவலா் குடியிருப்பு கழகம் சாா்பில் 2 ஏக்கா் 24 சென்ட் பரப்பளவில் 5 தளங்களுடன் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதில், துணை ஆணையா்கள் அறை, உதவி ஆணையா் கட்டுப்பாட்டு அறை, மத்திய குற்றப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்துவைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.