மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:25 am

Din

வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் தலைவா் புனிதா சரவணன் தலைமையில் நாசுவம்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வடுகபாளையம்புதூா் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்கக்கூடாது.

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூா் பகுதியில் அமையவுள்ள சுங்கச் சாவடி மையத்தில் இருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள்பட்ட கிராமங்களில் உள்ள வாகனங்களுக்கு கட்டண வரி விலக்கு அளிக்க வேண்டும். வடுகபாளையம்புதூா் ஊராட்சி பகுதி மிக வறட்சியான பகுதி, இங்கே விவசாய சாா்ந்த கோழிப்பண்ணை, விசைத்தறி ஆகியவைதான் முக்கிய தொழிலாக உள்ளது. நாள்தோறும் சுங்க வரி கொடுத்து வாகனத்தை இயக்க முடியாத காரணத்தினால் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்க வரி விலக்கு அளித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் நகராட்சி கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி பகுதியில் அமைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.