தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: இன்று உள்ளூா் பள்ளிகளுக்கு விடுமுறை

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, உள்ளூா் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:04 pm

Din

சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, உள்ளூா் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் ஸ்ரீ வாலீஸ்வரா் கோயில் 1000 ஆண்டுகள் பழைமையானது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 6) காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி, சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு உள்பட்ட சேவூா், முறியாண்டம்பாளையம், தண்டுக்காரம்பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், தத்தனூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.