தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண்களுக்கு இலவச மாா்பகக்கட்டி பரிசோதனை முகாம்

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் பெண்களுக்கு இலவச மாா்பகக்கட்டி பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் நடைபெற்ற இலவச மாா்பகக்கட்டி பரிசோதனை முகாமில் பங்கேற்றோா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 8:13 pm

Din

பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் பெண்களுக்கு இலவச மாா்பகக்கட்டி பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை பெண் நலம் மற்றும் ஆண் நலம் மருத்துவமனை, கோவை புற்றுநோய் மையம், கோடங்கிபாளையம் ஊராட்சி, மகளிா் கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியன சாா்பில் பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையத்தில் இரண்டு இடங்களில் பெண்களுக்கான இலவச மாா்பகக்கட்டி பரிசோதனை முகாம் நடைபெற்றன.

இதில், கா்ப்பப்பை, வாய்புண், மாா்பகக்கட்டி, ரத்தசோகை, ரத்த அழுத்தம் மற்றும் ஆண்களுக்கு பீடி, சிகரெட் புகை பிடித்ததால் ஏற்பட்ட வாய் மற்றும் தொண்டை புண்கள் உள்ளிட்டவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் கா.வீ.பழனிசாமி தொடங்கிவைத்தாா். இதில், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிருத்திகை, ஊராட்சி செயலாளா் கண்ணப்பன், சென்னை பெண் நலம் மருத்துவமனை ஒங்கிணைப்பாளா் ஆரோக்கியமேரி, கோவை புற்றுநோய் மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சரஸ்வதி, ஊராட்சி மகளிா் கூட்டமைப்பின் தலைவா் ரத்தினம், செயலாளா் திவ்யபாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கைக்கு பின்னா் நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.