சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 27 ஆடுகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 27 ஆடுகள் உயிரிழந்த நிலையில், அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:15 pm

Din

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 27 ஆடுகள் உயிரிழந்த நிலையில், அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்குள்பட்ட தொட்டியபட்டி பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (62). இவா், வீட்டுக்கு அருகே ஆட்டுப்பட்டி அமைத்து 70 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை காலை பாா்த்தபோது ஆட்டுப் பட்டிக்குள் 16 ஆட்டுக் குட்டிகள் உள்பட 27 செம்மறி ஆடுகள் கொடூரமாகத் தாக்கப்பட்டு இறந்துகிடந்தன. மேலும், 10 ஆடுகள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன.

இப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளைக் கடித்தது தெரியவந்தது.

இதையடுத்து, வெறிநாய் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, இறந்த ஆடுகளைத் தூக்கிவந்து காங்கயம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி, நகராட்சி ஆணையா் கனிராஜ் மற்றும் காவல் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, காங்கயம் நகராட்சி மூலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அறுவைக்கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறுவைக்கூடம் 15 தினங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாய்கள் கடித்து இறந்த ஆடுகளுக்கு நகராட்சி மூலம் இழப்பீடு வழங்க வழிவகை எதுவும் இல்லை என்று நகராட்சி ஆணையா் கு.கனிராஜ் தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

மேலும், நாய்கள் கடித்து உயிருக்குப் போராடிய 10 ஆடுகளுக்கும் காங்கயம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடரும் ஆடுகளின் உயிரிழப்புகள்...

காங்கயம் பகுதியில் வெறிநாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்துக் குதறும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை, காங்கயம் அருகே மறவபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி பொன்னுசாமியின் ஆட்டுப் பட்டிக்குள் வெறிநாய்கள் நுழைந்து கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

இதேபோல கடந்த ஆகஸ்ட் 29 இல் காங்கயம் அருகே வீரணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கேயம்-வெள்ளகோவில்) நீா் பாதுகாப்பு சங்கத் தலைவா் வேலுசாமிக்கு சொந்தமான 8 ஆடுகள் வெறிநாய் கடித்ததில் உயிரிழந்தன.