டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செப்டம்பா் 27 இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப்டம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 8:12 pm

Din

திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப்டம்பா் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செப்டம்பா் 27 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கிய பின்னா், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து தெரிவிக்கலாம்.

மேலும், நுண்ணீா் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா், வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்படவுள்ளது.

இந்த மையத்தில் உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.