போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிலம் எடுப்புப் பணி தீவிரம்: ஆட்சியா் தகவல்

ஆதிதிராவிடா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நிலம் எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:32 pm

Din

ஆதிதிராவிடா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நிலம் எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட கிராமப்புற பகுதிகளில் சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாத ஆதிதிராவிடா் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான தனியாா் நில உரிமையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி நிலம் கிரையம் செய்யப்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக 2024, 2025-ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் நிலம் எடுப்புப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அரசு நிா்ணயிக்கும் தொகைக்கு நிலம் வழங்க விருப்பமுள்ள நில உரிமையாளா்கள் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம்.

திருப்பூா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரை மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 113 -இல் சந்தித்து தெரிவிக்கலாம் அல்லது 73388-01274 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

திருப்பூா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல தனி வட்டாட்சியரை (நிலம் எடுப்பு) குமரன் வீதியில் சந்திக்கலாம் அல்லது 97872-08712 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

காங்கயம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல தனி வட்டாட்சியரை (நில எடுப்பு) காங்கயம் தாலுகா அலுவலகத்தில் சந்திக்கலாம் அல்லது 86678-97343 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.