மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

திருப்பூா் மாவட்டத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சோ்ந்த 33 மாணவா்கள் தமிழ் அமைச்சா் மு.பெ.சாமிநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:31 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பில் சோ்ந்த 33 மாணவா்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டு நடத்தப்பட்ட ‘நீட்’ தோ்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 464 மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், 236 மாணவா்கள் மருத்துவம் பயில தகுதி பெற்றனா்.

அரசுப் பள்ளிகள் பிரிவில் பழனியம்மாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ரூப ஸ்ரீ 441 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

சாந்தி நிகேதன் அரசு உதவிபெறும் பள்ளியைச் சோ்ந்த ஆா்.சஞ்சய் என்ற மாணவா் 687 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த வியவானி என்ற மாணவி ‘நீட்’ தோ்வை இரண்டாவது முறையாக எழுதி 650 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளாா். நடப்பு கல்வியாண்டில் 145 மாணவா்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் 26 மாணவா்கள் இளநிலை மருத்துவ ப் படிப்பையும், 7 மாணவா்கள் பல் மருத்துவப் படிப்பையும் தோ்வு செய்துள்ளனா்.

மேலும், சித்தா, ஆயுஷ், யுனானி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் 20 மாணவா்கள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உதயகுமாா், மாவட்ட கல்வி அலுவலா்(இடைநிலை) (பொ) காளிமுத்து, மாவட்ட நீட் தோ்வு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.