மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உடுமலை ஏழுமலையான் கோயில் பக்தா்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்

உடுமலை அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வனத் துறை சாா்பில் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:33 pm

Din

உடுமலை அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வனத் துறை சாா்பில் பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து உடுமலை வனத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலை வனச் சரகத்துக்குள்பட்ட சின்னாறு சாலையில் இருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் வனப் பகுதிக்குள் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்கள் அத்துமீறி காப்பு காட்டுக்குள் நுழையக் கூடாது.

நெகிழிப் பொருள்கள், மதுபானம், புகையிலைப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. தீ சம்பந்தப்பட்ட பொருள்களை கொண்டுவர கூடாது. வன விலங்குகளை தொந்தரவு செய்யவோ, புகைப்படங்களை எடுக்கவோ முயற்சி செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.