கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஊதிய நிலுவையை வழங்க தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

ஊதியம் நிலுவையை வழங்க வேண்டும் என தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

தனியாா் கல்லூரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளா் மாயவன்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:25 pm

Din

ஊதியம் நிலுவையை வழங்க வேண்டும் என தனியாா் கல்லூரி தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காங்கயம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் 22 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரி முன்பு தூய்மைப் பணியாளா்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், சிஐடியூ மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் தலைமையில், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளா் மாயவன் முன்னிலையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்திடம் பேசி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.