கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காந்தி ஜெயந்தி: அக்டோபா் 2 இல் கிராம சபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் புதன்கிழமை (அக்டோபா் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் புதன்கிழமை (அக்டோபா் 2) கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் புதன்கிழமை காலை 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.

இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்கான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது