கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூய்மை சேவையை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவா்கள் மனித சங்கிலி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தூய்மை சேவையை வலியுறுத்தி மனித சங்கிலியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மனித சங்கிலியில் ஈடுபட்ட நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:03 pm

Din

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தூய்மை சேவையை வலியுறுத்தி மனித சங்கிலியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு- 2 மாணவா்கள் சாா்பில் தூய்மை சேவை திட்டத்தின்கீழ் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக கல்லூரி சேவையை வலியுறுத்தி தூய்மை சேவையில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சிக்கு அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், பேராசிரியா்கள் சக்திசெல்வம், மோகன்குமாா் ஆகியோா் பேசுகையில், மாணவா்கள் தூய்மைப் பணியை தங்கள் இல்லங்களில் இருந்து தொடங்க வேண்டும். அதன் பின், பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் படிப்படியாக தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும். பேருந்து மற்றும் தொடா்வண்டியில் செல்லும்போது குப்பைகளை அதற்கு உண்டான இடத்தில் போடவேண்டும் என்றனா்.

இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்பது போன்ற கோஷங்களை எழுப்பி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.