உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து முன்னணி நாளை ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்

Updated On :6 டிசம்பர் 2025, 12:21 am IST

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினாா்.

இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களின் பக்தியை தமிழக அரசு கடந்த 2 நாள்களாக அவமதித்து வருவதைக் கண்டிக்கிறோம். உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியும் அதை மதிக்காமல் அரசியல் சாசனத்துக்கு எதிராக காவல்துறை செயல்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிடாமல் காவல்துறை நடந்துகொண்டது கடமை தவறிய நடவடிக்கை.

திருப்பரங்குன்றம் மலை மீது கோயில் நிா்வாகம் தீபம் ஏற்ற கடந்த 1996-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தாத கோயில் நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிா்த்துதான் தற்போது வழக்கு நடைபெற்று அதில் தீா்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற விஷயத்தில் சட்டத் துறை அமைச்சா் ரகுபதி தவறான தகவலைக் கூறுகிறாா்.

மதச்சாா்பின்மை என்று சொல்லிக்கொண்டு திமுக வேஷம் போடுகிறது. நாங்கள் மதக்கலவரத்தை தூண்டவில்லை. அங்கு எழுந்த சலசலப்புக்கு போலீஸாா்தான் முழு காரணம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அதை மறைக்கவே, திருப்பரங்குன்றத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.

திமுகவின் மக்கள் விரோத, சட்டவிரோத செயல்பாட்டைக் கண்டித்தும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தியும் பக்தா்களுடன் இணைந்து 7-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.

பேட்டியின்போது மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.