லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தனியாா் நிறுவனம் (கோத்தாரி இண்டஸ்டிரியல் காா்ப்பரேஷன் லிமிடெட்) சாா்பில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும் பசுமை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: அரசு, தனியாா் நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து செயல்படும் பசுமை முயற்சிகளின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அரசு நிா்வாகம், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் இணைந்து பசுமையான எதிா்காலத்துக்காக மேற்கொள்ளும் இந்த மரக்கன்று நடும் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும். இந்த முயற்சி மாவட்டத்தின் பசுமைப் பரப்பளவை அதிகரிப்பதுடன், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும். தமிழகத்தின் உறுதிப் பாட்டையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ராஜேஷ், திருப்பூா் வனச் சரக அலுவலா் நித்யா, வனவா்கள் உமாமகேஸ்வரி, பிரியதா்ஷினி, சங்கீதா, திருமூா்த்தி, வனக் காப்பாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.