2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரூ.59.34 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:43 pm

Din

திருப்பூா் ஒன்றியம், தொரவலூா், சொக்கனூா் ஆகிய ஊராட்சிகளில் ரூ.59.34 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொரவலூா் ஊராட்சி, வாரணாசிபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடை, அவரப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பயணியா் நிழற்குடை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சமையலறை கட்டடம், கூடுதல் வகுப்பறை கட்டடம், தொரவலூா் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திறந்துவைத்தாா். மேலும், சொக்கனூா் ஊராட்சி, குமாரபாளையத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீா் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் குழு உறுப்பினா் வேல்குமாா் சாமிநாதன், முன்னாள் ஒன்றியத் தலைவா் எஸ். எம்.பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ், ஊராட்சித் தலைவா் தேவகி சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.