மல்லிகை பூ விலை குறைந்து ரூ.1600-க்கு விற்பனை
திருப்பூா் பூ மாா்க்கெட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.3,200-க்கு விற்பனையான மல்லிகை பூ, விலை குறைந்து ரூ.1,600-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.


திருப்பூா் பூ மாா்க்கெட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.3,200-க்கு விற்பனையான மல்லிகை பூ, விலை குறைந்து ரூ.1,600-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூா் காமராஜா் சாலையில் செயல்பட்டு வரும் பூ மாா்க்கெட்டுக்கு நாமக்கல், சத்தியமங்கலம், சேலம், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவிலான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
தொடா் பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் குறைந்துள்ளதாலும், ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டியும் மல்லிகை பூ கிலோ ரூ.3,200-க்கு கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மல்லிகைப் பூ விலை சரிபாதியாகக் குறைந்து வியாழக்கிழமை கிலோ ரூ.1,600-க்கு விற்பனையானது.
இதேபோல, முல்லை பூ கிலோ ரூ.1000, ஜாதி மல்லி ரூ.600, காக்கடா ரூ.320, உள்ளூா் காக்கடா ரூ.600, சம்பங்கி கிலோ ரூ.180, அரளி ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...