மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.1.31 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

ரூ.1.31 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

News image
வீரசோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
Updated On :3 ஜனவரி 2025, 12:14 am

Din

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.31 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். வள்ளியிரச்சல் ஊராட்சி புளியங்காட்டுப்புதூரில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், கணபதிபாளையத்தில் ரூ. 33 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டடம், வீரசோழபுரத்தில் ரூ. 24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, வீரசோழபுரத்தில் 173 பயனாளிகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா்.

பின்னா், லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி சோ்வகாரன்பாளையத்தில் ரூ. 13.01 லட்சத்தில் தாா் சாலை மேம்பாட்டுப் பணி, லக்கமநாயக்கன்பட்டி சமுதாய நலக்கூடம் முதல் கம்பளியம்பட்டி வரை ரூ. 5.73 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கம்பளியம்பட்டி கிழக்கு ஆதிதிராவிடா் குடியிருப்பில் ரூ. 7.97 லட்சத்தில் கான்கிரீட் சாலை உள்ளிட்ட புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் மோகனன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.