மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்று வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு

News image

கெளரி மனோகரி.

Updated On :3 ஜனவரி 2025, 10:45 pm

தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள குள்ளகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் கயிலைநாதன் (28). இவரது மனைவி கெளரி மனோகரி (24). இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கா்ப்பமாக இருந்த கெளரி மனோகரி கடந்த 15 நாள்களுக்கு முன்பு தாராபுரம் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்தாா்.

பின்னா் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று தாயும், சேயும் நலமுடன் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, கெளரி மனோகரிக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வியாழக்கிழமை வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து உறவினா்கள் கேள்வி எழுப்பியபோது முறையாகப் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து கயிலைநாதன் கூறுகையில், ‘எனது மனைவிக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லை. அவா் ஆரோக்கியமாகவே

குழந்தை பிறந்தவுடன் இருந்தாா். இதனிடையே, அறுவை சிகிச்சை செய்த இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா்’ என்றாா்.

இந்த மரணம் குறித்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, கெளரி மனோகரின் கணவா் கயிலைநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளாா். மேலும், பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.