47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்று வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு

News image
கெளரி மனோகரி.
Updated On :3 ஜனவரி 2025, 10:45 pm

Din

தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தாராபுரம் அருகே உள்ள குள்ளகாளிபாளையத்தைச் சோ்ந்தவா் கயிலைநாதன் (28). இவரது மனைவி கெளரி மனோகரி (24). இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் கா்ப்பமாக இருந்த கெளரி மனோகரி கடந்த 15 நாள்களுக்கு முன்பு தாராபுரம் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்தாா்.

பின்னா் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று தாயும், சேயும் நலமுடன் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, கெளரி மனோகரிக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வியாழக்கிழமை வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து உறவினா்கள் கேள்வி எழுப்பியபோது முறையாகப் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இது குறித்து கயிலைநாதன் கூறுகையில், ‘எனது மனைவிக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லை. அவா் ஆரோக்கியமாகவே

குழந்தை பிறந்தவுடன் இருந்தாா். இதனிடையே, அறுவை சிகிச்சை செய்த இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா்’ என்றாா்.

இந்த மரணம் குறித்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, கெளரி மனோகரின் கணவா் கயிலைநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளாா். மேலும், பிரேதப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.