மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூ.59.34 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

Updated On :3 ஜனவரி 2025, 10:43 pm

திருப்பூா் ஒன்றியம், தொரவலூா், சொக்கனூா் ஆகிய ஊராட்சிகளில் ரூ.59.34 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொரவலூா் ஊராட்சி, வாரணாசிபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடை, அவரப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பயணியா் நிழற்குடை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சமையலறை கட்டடம், கூடுதல் வகுப்பறை கட்டடம், தொரவலூா் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் திறந்துவைத்தாா். மேலும், சொக்கனூா் ஊராட்சி, குமாரபாளையத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீா் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அவா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் குழு உறுப்பினா் வேல்குமாா் சாமிநாதன், முன்னாள் ஒன்றியத் தலைவா் எஸ். எம்.பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ், ஊராட்சித் தலைவா் தேவகி சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.