தமிழா் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு என மொத்தம் 2.20 கோடி பயனாளிகளுக்கு வழங்க ரூ.249.75 கோடி அனுமதித்து முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதன்பேரில், திருப்பூா் மாவட்டத்துக்கு 7.99 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 799 மெட்ரிக் டன் பச்சரிசியும், 799 மெட்ரிக் டன் சா்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் செய்திட ரூ.2.79 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை திருப்பூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் வியாழக்கிழமை முதல் வரும் ஜனவரி 13- ஆம் தேதி வரையில் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரா்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி முறையில் நாள்தோறும் 250 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. ஆகவே, கூட்ட நெரிசலின்றி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.