பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:49 am

Syndication

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

பச்சாபாளையம் கிராமம், சுக்குட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் (56). இவா் ஓலப்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சாலையைக் கடந்துள்ளாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமணனை அப்பகுதியினா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூா் மாவட்டம், பாட்டாகுடி செல்வம் மகன் கிருஷ்ணமூா்த்தி (33) மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.