சுங்கச் சாவடி எதிா்ப்பு குழு சாா்பில் 20 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள வாகனங்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில், பொங்கலூா் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த காா், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். மேலும், அருகிலுள்ள ஊா்களை சோ்ந்த வாகனங்களுக்கு சலுகை கட்டணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தப் பேச்சுவாா்த்தையில் சுமுக தீா்வு ஏற்பட்டதாக சுங்கச் சாவடி எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா் தெரிவித்தாா்.