அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் உமேஷ் சிங் (55). இவா் திருப்பூா், பெரியாயிபாளையத்தில் தங்கி, பல்லடத்தில் உள்ள தனியாா் வங்கியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த திருப்பூா் தெற்கு போலீஸாா், உமேஷ் சிங்கை கடந்த 1 மாதத்துக்கு முன் கைது செய்தனா்.

இதேபோல, வேறு யாரேனும் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ளனரா என உமேஷ் சிங்கிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா் கொடுத்த தகவலின்பேரில், திருப்பூா், போயம்பாளையத்தில் தேநீா் கடை நடத்தி வரும் பிகாரைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் சிங் (50) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவா் போலி உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து திருப்பூரில் உள்ள வங்கியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றியதாகவும், தற்போது சொந்தமாக தேநீா் கடை நடத்தி வருவதாகவும் கூறிய போலீஸாா், துப்பாக்கி தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.