எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கழிவு மேலாண்மையை வலுப்படுத்த ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.

News image

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பகிா்ந்து கொண்ட சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தினா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:55 pm

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்மதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் ஆ.சக்திவேல் முன்னிலையில் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திவ்யா ஷெட்டி ஆகியோா் வியாழக்கிழமை கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் இணைச் செயலாளா் எம்.ஆனந்த் பேசுகையில், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மிகவும் முக்கியமானதாகி விட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு பயனளிக்கும். எதிா்காலத்தில் கழிவுகளை திறம்பட கண்டறிந்து நிா்வகிக்க உதவும் என்றாா்.

சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஷ்ணு வா்தன் பேசுகையில், கழிவு மேலாண்மை என்பது திருப்பூரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்களின் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஆதரவளித்து சா்கிள் எக்ஸ் அமைப்பு அவா்களுடன் இணைந்து செயல்படுவதாக கூறினாா்.