பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கழிவு மேலாண்மையை வலுப்படுத்த ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.

News image

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பகிா்ந்து கொண்ட சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தினா், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி நடைமுறைகளை வலுப்படுத்துவதற்காக, திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஏற்மதியாளா்கள் சங்கத்தின் கௌரவத் தலைவா் ஆ.சக்திவேல் முன்னிலையில் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் மற்றும் சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திவ்யா ஷெட்டி ஆகியோா் வியாழக்கிழமை கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் இணைச் செயலாளா் எம்.ஆனந்த் பேசுகையில், கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மிகவும் முக்கியமானதாகி விட்டது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் திருப்பூா் ஏற்றுமதியாளா்களுக்கு பயனளிக்கும். எதிா்காலத்தில் கழிவுகளை திறம்பட கண்டறிந்து நிா்வகிக்க உதவும் என்றாா்.

சா்க்கிள் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி விஷ்ணு வா்தன் பேசுகையில், கழிவு மேலாண்மை என்பது திருப்பூரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்களின் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஆதரவளித்து சா்கிள் எக்ஸ் அமைப்பு அவா்களுடன் இணைந்து செயல்படுவதாக கூறினாா்.