திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:29 am IST

வெள்ளக்கோவில் அருகே மாமனாா் வீட்டுக்கு வந்த மருமகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா தென்முகம் வெள்ளோடு நல்லெண்ணம்பாளையத்தைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் மகன் தாமரைச்செல்வன் (42). விவசாய கூலித் தொழிலாளி.

இவருக்கும் வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்த இந்துமதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு பிரணவ் (4), பிரனிஷா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துமதி உப்புப்பாளையத்தில் உள்ள தனது தாயாா் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில், உப்புப்பாளையம் மாமனாா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த தாமரைச்செல்வன், குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடன் வருமாறு மனைவியிடம் கூறியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தாமரைச்செல்வன் திடீரென வீட்டில் கிடந்த மின்சார வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.